நாடு முழுவதும் சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் பொது மக்கள் பாதிப்பு

Date:

(File Photo)

இலங்கை முழுவதும் இன்றைய தினம் அரச மருத்துவமனைகளில் தாதிமார் உள்ளிட்ட சுகாதாரத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு வலியுறுத்தியே இந்தப்போராட்டத்தை முன்னெடுப்பதாக சுகாதார தொழிற்சங்க கூட்டணியின் ஏற்பாட்டாளரான சமன் ரட்னபிரிய தெரிவித்துள்ளார்.

இதன்படி இன்று காலை நாடு முழுவதும் சுகாதாரத்துறையைச் சேர்ந்த 17 தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

3 மாத காலமாக அரசாங்கத்திற்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற போதும் இதுவரையில் தீர்வு காணப்படவில்லை என்றும் இதனால் தீர்வு கிடைக்கும் வரையில் தமது தொழிற்சங்க போராட்டத்தை தொடருவோம் என்றும் சமன் ரட்னபிரிய தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இன்றைய சுகாதார ஊழியர்களின் போராட்டத்தினால் கொழும்பு அரச மருத்துவமனையில் காத்திருந்த மக்கள் பெரும் இன்னல்களுக்குள்ளாகினர்.

இதன்போது கருத்து தெரிவித்த மக்கள்’ தாங்களுக்கு வேலைநிறுத்தம் பற்றி முன்பே அறிவிருத்திருந்தால் வருகைத் தந்திருக்க மாட்டோம், தூரப் பிரதேசங்களில் இருந்து வருகைத் தருவதால் மிகவும் சிரமமாகவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், வைத்தியர்களை தெய்வமாகவே கருதுகின்றோம் எனினும் தற்போது அவர்கள் கொலைகாரர்களாகவே காணப்படுகின்றனர் என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதேவேளை பெரும் எண்ணிக்கையான மக்கள் தங்கள் கிளினுக்குகளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...