பந்து வீச அதிக நேரத்தை எடுத்துக்கொண்டமைக்காக இலங்கை அணிக்கு 20% அபராதம்!

Date:

நேற்றைய போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களை வீசுவதற்கு, அதிக நேரத்தை எடுத்துக்கொண்டமைக்காக இலங்கை அணிக்கு மொத்த போட்டி கட்டணத்தில் 20% த்தை அபராதம் விதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டி மத்தியஸ்தர் டேவிட் பூன் தீர்மானித்துள்ளார்.

நேற்றைய ஆட்டம் முடிவடையும் போது இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட ஒரு ஓவர் பின்தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என டேவிட் பூன் தெரிவித்துள்ளார்.

வீரர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான ஐசிசி நன்னடத்தை விதி 2. 22 இன் பிரகாரம், வழங்கப்பட்ட நேரத்தினுள் ஓவர்களை வீச தவறியதற்காக, தாமதிக்கப்பட்ட ஓவர்களுக்காகவும் அவர்களின் போட்டிக் கட்டணத்தில் 20% அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...