பந்து வீச அதிக நேரத்தை எடுத்துக்கொண்டமைக்காக இலங்கை அணிக்கு 20% அபராதம்!

Date:

நேற்றைய போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களை வீசுவதற்கு, அதிக நேரத்தை எடுத்துக்கொண்டமைக்காக இலங்கை அணிக்கு மொத்த போட்டி கட்டணத்தில் 20% த்தை அபராதம் விதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டி மத்தியஸ்தர் டேவிட் பூன் தீர்மானித்துள்ளார்.

நேற்றைய ஆட்டம் முடிவடையும் போது இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட ஒரு ஓவர் பின்தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என டேவிட் பூன் தெரிவித்துள்ளார்.

வீரர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான ஐசிசி நன்னடத்தை விதி 2. 22 இன் பிரகாரம், வழங்கப்பட்ட நேரத்தினுள் ஓவர்களை வீச தவறியதற்காக, தாமதிக்கப்பட்ட ஓவர்களுக்காகவும் அவர்களின் போட்டிக் கட்டணத்தில் 20% அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தயாசிறி எம்.பியின் நடவடிக்கை குறித்து விசாரணை செய்ய மூவர் அடங்கிய குழு

தயாசிறி ஜயசேகர எம்.பியின் நடவடிக்கை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுனில்...

தரையிறங்கவிருந்த 3 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (19) அதிகாலை தரையிறங்க திட்டமிடப்பட்ட...

பேருந்து விபத்தில் உயிரிழந்தோா் உடல்கள் சவூதியில் அடக்கம்

சவூதி பேருந்து விபத்தில் உயிரிழந்தோா் உடல்களை சவூதியில் அடக்கம் செய்ய முடிவு...

நிலச்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக...