சவூதி அரேபியாவுக்கு செல்லும் மற்றும் வெளியேறும் பயணிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் சிவில் விமான போக்குவரத்து பொது ஆணையகம் சவூதி அரேபியாவிற்கு பயணம் செய்யும் அனைத்து பயணிகளுக்கும் புதிய விதிகளை அறிவித்துள்ளது.
சவூதி அரேபியா மற்றும் அங்கிருந்து செல்லும் பயண நடைமுறைகளை புதுப்பிப்பது தொடர்பாக, இராச்சியத்தின் விமான நிலையங்களில் இயங்கும் அனைத்து விமான அதிகாரிகளுக்கும் விமான போக்குவரத்து ஆணையகம் ஒரு சுற்றறிக்கையில் இதனை அறிவித்துள்ளது.
புதிய வழிகாட்டுதல்கள் இன்று ( 09) பெப்ரவரி 2022 புதன்கிழமை அதிகாலை 1 மணி முதல் அமலுக்கு வரும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பயண வழிகாட்டுதல்கள் பின்வருமாறு :
சவூதி அரேபியாவை விட்டு வெளியேறும் குடிமக்கள் (கொவிட்-19) தடுப்பூசியின் (மூன்றாவது) பூஸ்டர் டோஸை, இரண்டாவது டோஸைப் பெற்றதிலிருந்து (மூன்று) மாதங்கள் அதற்காக செலவழித்தார்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
(16) வயதுக்கு கீழ், அல்லது (தவக்கல்னா) விண்ணப்பத்தில் உள்ளவற்றின் படி விலக்கு அளிக்கப்பட்டவர்கள்.
பொதுமக்கள் உட்பட சவூதிக்கு வரும் அனைவரும், அவர்களின் நோய்த்தடுப்பு நிலையைப் பொருட்படுத்தாமல், அங்கீகரிக்கப்பட்ட PCR சோதனைக்கான எதிர்மறைச் சான்றிதழை வைத்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் அல்லது எடுக்கப்பட்ட மாதிரிக்கான கொவிட் வைரஸிற்கான (COVID19- ஆன்டிஜென் சோதனை) அங்கீகரிக்கப்பட்ட விரைவான ஆன்டிஜென் சோதனை சவூதியிலிருந்து அவர்கள் புறப்பட்ட திகதியிலிருந்து (48) மணி நேரத்திற்குள்,( 8 வயதுக்குட்பட்டவர்கள் தவிர) அவசியமாகும்.