இலங்கை மனித உரிமை விவகாரம்: மீளாய்வுக்காக எழுத்து மூல அறிக்கை சமர்ப்பிப்பு!

Date:

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது இலங்கை தொடர்பிலான எழுத்துமூல அறிக்கையை இன்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் சமர்பிக்கவுள்ளார்.

இந்த அறிக்கை மார்ச் 3 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையின் பிரதியை வெளிவிவகார அமைச்சுக்கு வழங்குவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஐந்து நாட்களுக்குள் இலங்கை பதில் அளிக்க வேண்டும் என்றும், உரிய பதில்கள் கவனமாக தொகுக்கப்பட்டு பெப்ரவரி 19 ஆம் திகதி ஜெனிவாவுக்கு அனுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாது, 49 ஆவது கூட்டத்தொடரின்போது சர்வதேச சமூகம் இலங்கையின் நிலைப்பாட்டை சிரமமின்றி ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கை காணப்படுவதாகவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

இதேவேளை மனித உரிமைகள் நிலைமைய மேம்படுத்த உறுதியான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளதால் இம்முறை இந்த விடயம் கடினமானதாக இருக்காது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (04) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை...

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...