இலங்கையில் பால் உற்பத்தித் திட்டத்திற்கு அமெரிக்கா உதவி!

Date:

இலங்கையில் பால் உற்பத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிதி உதவியை வழங்குவதற்கு ஐக்கிய அமெரிக்காவின் விவசாயத் திணைக்களம் உதவி வழங்கியுள்ளது.

அதேநேரம், பால் உற்பத்தியாளர்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும் அவர்களின் உற்பத்தியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

மேலும், இந்தத் திட்டம் தொடர்பாக 2024 செப்டம்பர் மாதம் வரை தேவையான நிதியை வழங்க அமெரிக்க விவசாயத் துறை ஒப்புக் கொண்டுள்ளது.

மேலும் 38 அரசு மற்றும் தனியார் துறை பால் உற்பத்தியாளர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் அவர்களின் திறன் மேம்பாட்டு திட்டங்களை தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, உத்தேச திட்டத்தை அமுல்படுத்துவதற்காக அமெரிக்காவின் விவசாய திணைக்களத்திற்கும் இலங்கையின் விவசாய அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்வதற்காக விவசாய அமைச்சர் சமர்ப்பித்த தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (04) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை...

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...