உக்ரைன்-ரஷ்யா போர் Updates;சர்வதேச சந்தையில் ரஷ்யாவின் செயல்பாடுகளைத் தடுப்போம்-பைடன் அதிரடி!

Date:

ரஷ்யா மீது பொருளாதார தடைகளை அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சர்வதேச சந்தையில் ரஷ்யாவின் செயல்பாடுகளைத் தடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த பையன்,போரை ரஷ்யா தான் முதலில் ஆரம்பித்ததாகவும் அதற்கான விளைவுகளை புடின் சந்தித்தே தீர வேண்டும் என்றார்.

உக்ரைனுக்கு ஆதரவாக படைகளை அனுப்பப் போவதில்லை என்றும் அதேநேரம் நேட்டோ நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்றார். சைபர் தாக்குதல் நடத்த ரஷ்யா முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு பதிலடி கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை என்றார்.

உக்ரைன், ரஷ்யா விவகாரத்தில் இந்தியா யார் பக்கம் இருக்கிறது என கலந்தாலோசித்து வருவதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உலகின் பல நாடுகள் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பைடன் தெரிவித்துள்ளார். ரஷ்ய தொழில் நிறுவனங்கள் நான்கு முக்கிய வங்கிகளின் சொத்துக்கள் முடக்கப்படுவதாக பைடன் கூறியுள்ளார். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...