உக்ரைன்-ரஷ்யா போர் Updates;சர்வதேச சந்தையில் ரஷ்யாவின் செயல்பாடுகளைத் தடுப்போம்-பைடன் அதிரடி!

Date:

ரஷ்யா மீது பொருளாதார தடைகளை அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சர்வதேச சந்தையில் ரஷ்யாவின் செயல்பாடுகளைத் தடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த பையன்,போரை ரஷ்யா தான் முதலில் ஆரம்பித்ததாகவும் அதற்கான விளைவுகளை புடின் சந்தித்தே தீர வேண்டும் என்றார்.

உக்ரைனுக்கு ஆதரவாக படைகளை அனுப்பப் போவதில்லை என்றும் அதேநேரம் நேட்டோ நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்றார். சைபர் தாக்குதல் நடத்த ரஷ்யா முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு பதிலடி கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை என்றார்.

உக்ரைன், ரஷ்யா விவகாரத்தில் இந்தியா யார் பக்கம் இருக்கிறது என கலந்தாலோசித்து வருவதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உலகின் பல நாடுகள் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பைடன் தெரிவித்துள்ளார். ரஷ்ய தொழில் நிறுவனங்கள் நான்கு முக்கிய வங்கிகளின் சொத்துக்கள் முடக்கப்படுவதாக பைடன் கூறியுள்ளார். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...