உக்ரைன்-ரஷ்யா போர் Updates; ரஷ்யாவுக்கு ஐரோப்பிய ஆணையம் எச்சரிக்கை!

Date:

ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்றும், ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள ரஷ்யாவின் சொத்துக்கள் முடக்கப்படும் என்றும் ஐரோப்பிய ஆணையம் எச்சரித்துள்ளது.

ரஷ்யாவின் இலக்கு உக்ரைன் மாத்திரமல்ல, ஐரோப்பாவின் நிலைத்தன்மையைச் சீர்குலைப்பதும் தான் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உருசுலா வாண்டர் லியன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஐரோப்பாவில் போர் வருவதற்கு காரணம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தான் என்றும்,போரால் ஏற்படும் இழப்புகளுக்கு ரஷ்யாவே பொறுப்பேற்கச் செய்வோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கும் அதன் மக்களுக்கும் துணை நிற்பதாக உறுதியளித்த அவர் ரஷ்யப் பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்யும் வகையில் அதன் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கலந்து பேசிய பின் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும், ஐரோப்பிய நிதிச் சந்தையில் ரஷ்ய வங்கிகளுக்கான வணிகத் தொடர்பை நிறுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...