‘எந்தவொரு பிரதேசத்திலும் மின்சார விநியோகம் தடைபடாது’: மின்சார சபை

Date:

நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் இன்று மின்சார விநியோகம் தடைபடாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு தேவையான எரிபொருளை மின்சார சபைக்கு வழங்குவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்இணங்கியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்தார்.

இருப்பினும், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், எதிர்காலத்தில் எரிபொருள் விநியோகம் கட்டுப்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது.

இதன்மூலம், தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பாக பல தரப்பினருடன் இலங்கை மின்சார சபை தீவிர கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், மின்சாரம் தடைபடுவதை தடுக்கும் வகையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறும் பொது மக்கள் மன்ற செயலாளர் மேலும் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக மாலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை ‘பீக் ஹவர்ஸில்” பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

திட்டமிடப்பட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது எனத் தெரிவித்த வசந்த பெரேரா, எவ்வாறாயினும், பராமரிப்புப் பணிகள் மற்றும் திடீர் மின்தடைகள் காரணமாக மின்வெட்டு ஏற்படுவதைத் தடுக்க முடியாது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...