‘எந்தவொரு பிரதேசத்திலும் மின்சார விநியோகம் தடைபடாது’: மின்சார சபை

Date:

நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் இன்று மின்சார விநியோகம் தடைபடாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு தேவையான எரிபொருளை மின்சார சபைக்கு வழங்குவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்இணங்கியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்தார்.

இருப்பினும், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், எதிர்காலத்தில் எரிபொருள் விநியோகம் கட்டுப்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது.

இதன்மூலம், தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பாக பல தரப்பினருடன் இலங்கை மின்சார சபை தீவிர கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், மின்சாரம் தடைபடுவதை தடுக்கும் வகையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறும் பொது மக்கள் மன்ற செயலாளர் மேலும் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக மாலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை ‘பீக் ஹவர்ஸில்” பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

திட்டமிடப்பட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது எனத் தெரிவித்த வசந்த பெரேரா, எவ்வாறாயினும், பராமரிப்புப் பணிகள் மற்றும் திடீர் மின்தடைகள் காரணமாக மின்வெட்டு ஏற்படுவதைத் தடுக்க முடியாது.

Popular

More like this
Related

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...

கலாசாரங்களை சீரழிக்கும் LGBTQ சுற்றுலா திட்டங்களை அனுமதிக்க வேண்டாம்:கொழும்பு பேராயர் வேண்டுகோள்

நாட்டில் LGBTQ (ஓரினச்சேர்க்கை) சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்துள்ள...