எரிபொருள் கொள்வனவில் கட்டுப்பாடு காரணமாக பதற்றமான சூழ்நிலை!

Date:

ஹம்பாந்தோட்டை மற்றும் களுத்துறை உட்பட நாடு முழுவதிலும் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.

எரிபொருள் நிலையங்களில் கையிருப்பு இல்லாமல், போக்குவரத்தில் சிக்கித் தவித்ததால், பல பொதுமக்கள் கொந்தளிப்புடன் காணப்பட்டனர்.

நாட்டில் பல எரிபொருள் நிலையங்களில் டீசல் இருப்பு இல்லை, சூப்பர் டீசல் மற்றும் பெட்ரோல் மட்டுமே கிடைக்கும் எக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிருப்தியடைந்த நுகர்வோர், தேவையான எரிபொருளை வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எரிபொருளை கொள்வனவு செய்யும் போது தலா ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ரூபாவுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறு எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மோட்டார் சைக்கிள்களுக்கு அதிகபட்சமாக ஆயிரம் ரூபாவுக்கு எரிபொருள் வழங்கப்படுவதுடன் கார்கள் மற்றும் பேருந்துகளுக்கு அதிகபட்சமாக இரண்டாயிரம் ரூபாவுக்கு எரிபொருள் வழங்கப்படுகிறது.

நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை கொள்வனவு செய்யும் போது, இப்படியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால், பெரும் கஷ்டங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக பொது மக்கள் கூறியுள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...