நாட்டில் 6 மணிநேர தொடர் மின்வெட்டு அமுல்: மின்சார சபை அறிவிப்பு

Date:

நாட்டில் 6 மணிநேர தொடர் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையில், தொடர் மழைவீழ்ச்சி கிடைக்காவிட்டால் ஏப்ரல் மாதமாகும் போது நீர் மின் உற்பத்திக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படுமென அந்த சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 6 மணிநேர தொடர் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ள கெரவலபிடிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை மாலை அளவில் மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க கூடியதாக இருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்த களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தை நேற்று பிற்பகல் தேசிய கட்டமைப்புடன் இணைத்ததாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது.

கெரவலபிடிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொழிநுட்ப கோளாறு காரணமாக நேற்று பிற்பகல் செயலிழந்த நிலையில் இதன் காரணமாக தேசிய மின் கட்டமைப்பிற்கு 270 மெகாவோட் மின்சாரம் இழப்பு ஏற்பட்டிருந்தது.

அதேபோல், 130 மெகாவோட் மின்சார இழப்பு களனிதிஸ்ஸ மின்சார உற்பத்தி நிலையத்தில் இருந்து ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...