நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 405 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.இதற்கமைய, கொவிட் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 582,064 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, , நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 620,732 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் (07) 35 கொவிட் மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.இதற்கமைய 15,656 பேர் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.