ரஷ்யா படையெடுத்தால் உக்ரைனை பாதுகாக்க கூடுதலான படைகளை அனுப்பி வைப்போம்- ஜோ பைடன் அதிரடி!

Date:

ரஷ்யா படையெடுத்தால் உக்ரைனை பாதுகாக்க கூடுதலான படைகளை அனுப்பி வைப்போம் என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும், நேட்டோ படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஒவ்வொரு நிலமும் பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன் ரஷ்யாவின் இரண்டு நிதி நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளார். மேலும் பல தடைகள் விதிக்கப்படும் என்றும் எச்சரித்த ஜோ பைடன் மேற்கத்திய நாடுகளிலிருந்து அனைத்து நிதி உதவிகளும் ரஷ்யாவுக்கு நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். உடனடியாக ரஷ்ய ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் மேலும் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...