ரஷ்யா படையெடுத்தால் உக்ரைனை பாதுகாக்க கூடுதலான படைகளை அனுப்பி வைப்போம்- ஜோ பைடன் அதிரடி!

Date:

ரஷ்யா படையெடுத்தால் உக்ரைனை பாதுகாக்க கூடுதலான படைகளை அனுப்பி வைப்போம் என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும், நேட்டோ படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஒவ்வொரு நிலமும் பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன் ரஷ்யாவின் இரண்டு நிதி நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளார். மேலும் பல தடைகள் விதிக்கப்படும் என்றும் எச்சரித்த ஜோ பைடன் மேற்கத்திய நாடுகளிலிருந்து அனைத்து நிதி உதவிகளும் ரஷ்யாவுக்கு நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். உடனடியாக ரஷ்ய ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் மேலும் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...