ரஷ்யா படையெடுத்தால் உக்ரைனை பாதுகாக்க கூடுதலான படைகளை அனுப்பி வைப்போம் என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும், நேட்டோ படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஒவ்வொரு நிலமும் பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன் ரஷ்யாவின் இரண்டு நிதி நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளார். மேலும் பல தடைகள் விதிக்கப்படும் என்றும் எச்சரித்த ஜோ பைடன் மேற்கத்திய நாடுகளிலிருந்து அனைத்து நிதி உதவிகளும் ரஷ்யாவுக்கு நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். உடனடியாக ரஷ்ய ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் மேலும் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.