விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு பிசிசிஐ விசேட ஓய்வை அறிவித்தது!

Date:

விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு பிசிசிஐ 10 நாட்களுக்கு விளையாட்டிலிருந்து ஓய்வு வழங்கியுள்ளது.

எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் இலங்கை அணிக்கு எதிரான போட்டி தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இந்த ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. குறித்த தொடரில் விராட் டி 20 தொடரில் களமிறங்காமல் டெஸ்ட் போட்டி தொடரில் மட்டும் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு அளிக்கப்பட்டதையடுத்து கடந்த 2 வது டி20 போட்டியில் அரை சதம் விளாசி அணியின் தொடர் வெற்றிக்கு காரணமாக இருந்த இருவருமே இன்றைய கடைசி டி20 போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை. அவர்கள் இன்று சொந்த ஊர் திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு!

தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார...

நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலையைக் கருத்திற் கொண்டு நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து...

களனி கங்கை தாழ்நில மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

களனி கங்கைப் படுகைக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தலை எதிர்வரும்...

மோசமான வானிலை: பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு!

நிலவிவரும் மோசமான வானிலை காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால்,...