19வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் சுற்றில் முதல் இடம் பிடித்த இந்திய அணி அரை இறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 8-வது முறையாக உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
மறுபுறம் இங்கிலாந்து அணியும் தனது வெற்றியை உறுதி செய்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஜூனியர் உலக கிண்ணத்தை முதன்முறையாகக் கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்தும், ஐந்தாவது முறையாக வெல்ல இந்தியாவும் முனைப்புக் காட்டி வருகின்றன.
எது எவ்வாறாக இருந்தாலும் இலங்கை அணியும் இந்த போட்டியில் தமது முழுக்கவனத்தையும் செலுத்தி வந்தது பாராட்டுக்குரியது.