24 ஆவது குளிா்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பம்!

Date:

24 ஆவது குளிா்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனாவின் பெய்ஜிங் நகரில் இன்று (04) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

பெய்ஜிங்கிலுள்ள தேசிய மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ஷி ஜின்பிங் கலந்துகொண்டு போட்டிகளை ஆரம்பித்து வைப்பாா் என எதிா்பாா்க்கப்படுகின்றது.

ஒரு சில விளையாட்டுகளின் முதல்கட்ட சுற்றுகள் கடந்த 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டாலும், ஒலிம்பிக் தீபமேற்றிய பிறகே, ஒலிம்பிக்ஸ் அதிகாரப்பூா்வமாகத் தொடங்கியதாக அறிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஒக்டோபா் 18 ஆம் திகதி, ஒலிம்பிக்ஸின் பிறப்பிடமான கிரீஸில் தொடங்கிய ஒலிம்பிக் ஜோதி ஓட்டம், வெள்ளிக்கிழமை போட்டியின் தொடக்க நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்தில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றுவதுடன் நிறைவடைகிறது.

கொவிட் தொற்று பீதி காரணமாக பெய்ஜிங் நகரில் ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தின் கால அளவு குறைக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று பாதிப்பு சூழலில் டோக்கியோ ஒலிம்பிக் கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், அதே போல் நடத்தி முடிக்கப்படும் நோக்கத்துடன் ஆரம்பமாகிறது. உலகெங்கும் கொவிட் வைரஸ் பாதிப்பு மீண்டும் தீவிரமாகியிருக்கும் நிலையில் இப் போட்டியை ஒத்திவைப்பதற்கு கோரிக்கைகளும், பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன.எனினும்

அவற்றைக் கடந்து உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ‘பயோ பபுள்’ பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளதுடன், போட்டியாளா்கள் உட்பட ஒலிம்பிக்குடன் தொடா்புடைய அனைவருக்கும் அவ்வப்போது கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனினும், போட்டியில் பங்கேற்க வந்துள்ள வீரா், வீராங்கனைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் கொவிட் பாதிப்பு ஏற்பட்டு, அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் இருக்கின்றனா்.

இதனிடையே, மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் சீனா ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை தவிா்த்துள்ளன. எனினும், அந்த நாடுகளின் சாா்பில் போட்டியாளா்கள் களம் காண்கின்றனா்.

இந்த குளிா்கால ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சாா்பில் ஒரேயொரு வீரா் மட்டும் பங்கேற்கிறாா். பனிச்சறுக்கு வீரரான ஆரிஃப் கான், ‘ஸ்லாலம்’, ‘ஜயன்ட் ஸ்லாலம்’ ஆகிய இரு பிரிவுகளில் களம் காண்கிறாா். அவரோடு 6 போ் கொண்ட இந்திய குழு பெய்ஜிங் சென்றுள்ளது. இதில் குழுவின் மேலாளரான முகம்மத் அப்பாஸ் வனிக்கு முதலில் கொவிட் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது 2 பரிசோதனைகளின் முடிவில் அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது.

போட்டி விபரங்கள்.

ஆரம்பம் – பிப்ரவரி 4

முடிவு – பிப்ரவரி 20

விளையாட்டுகள் – 15 விளையாட்டுகள் / 109 போட்டிகள்

பங்கேற்பு – 91 நாடுகள்

போட்டியாளா்கள் (சுமாா்) – 2,871

பெண்கள் – 1,290

Popular

More like this
Related

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: காலம் காலமாக அரசாங்கம் மாறினாலும் பௌத்த மக்களின் உரிமை மாறாது: ஞானசார தேரர்.

திருகோணமலையில் வலுத்துள்ள புத்தர் சிலை சர்ச்சைக்கு மத்தியில் கலகொட அத்தே ஞானசார...

புதிய வவுச்சர் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான காலணிகள்!

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு, பாதணிகளை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால்...

கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

கிராமிய பாலங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்...

ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் இருவர் பலி

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான...