PSL Update: பாகிஸ்தான் சூப்பர் லீக் கிண்ணத்தை ஷஹீன் அப்ரிடி தலைமையிலான லாஹுர் அணி கைப்பற்றியது!

Date:

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதி போட்டி லாஹுரில் நேற்று (27) முல்தான் சுல்தான் மற்றும் லாஹுர் காலாண்டர்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது.இப் போட்டியில் லாஹுர் அணி 42 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய லாஹுர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.அதிகபட்சமாக முகம்மத் ஹபீஸ் 69(46) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

181 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சுல்தான் அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.அணியின் தலைவர் முகம்மத் ரிஸ்வான் 14 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் ஷஹீன் அப்ரிடி தலைமையிலான லாஹுர் காலாண்டர்ஸ் அணி முதல் முறையாக கிண்ணத்தை கைப்பற்றியது.அணியின் தலைவர் ஷஹீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...