அரசாங்கத்தின் 11 அங்கத்துவக் கட்சிகளின் புதிய முயற்சி!

Date:

அரசாங்கத்தின் 11 அங்கத்துவக் கட்சிகள் 2022 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் திகதி தங்கள் கூட்டு தேசியக் கொள்கையை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய ஜனநாயக சுதந்திர முன்னணி, லங்கா சமசமாஜக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, தேசிய காங்கிரஸ், பிவித்துரு ஹெல உறுமய, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி, விஜய தரனை தேசிய சபை, மற்றும் எக்சத் மகாஜன கட்சி ஆகியன அங்கம் வகிக்கின்றன.

மார்ச் 2 ஆம் திகதி பிற்பகல் 03.00 மணிக்கு ஸ்ரீ ஜயவர்தனபுர மொனார்க் இம்பீரியல் மண்டபத்தில் தேசியக் கொள்கை வெளியிடப்படும்.

இதன்போது, இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடிகளுக்கு குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகளை கொண்டதாக தேசிய கொள்கை உள்ளதாக கட்சி தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் முன்மொழிவுகளையும் இந்த தேசியக்கொள்கை விடயத்தில் உள்ளடக்கியுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...