இலங்கை மனித உரிமை விவகாரம்: மீளாய்வுக்காக எழுத்து மூல அறிக்கை சமர்ப்பிப்பு!

Date:

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது இலங்கை தொடர்பிலான எழுத்துமூல அறிக்கையை இன்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் சமர்பிக்கவுள்ளார்.

இந்த அறிக்கை மார்ச் 3 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையின் பிரதியை வெளிவிவகார அமைச்சுக்கு வழங்குவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஐந்து நாட்களுக்குள் இலங்கை பதில் அளிக்க வேண்டும் என்றும், உரிய பதில்கள் கவனமாக தொகுக்கப்பட்டு பெப்ரவரி 19 ஆம் திகதி ஜெனிவாவுக்கு அனுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாது, 49 ஆவது கூட்டத்தொடரின்போது சர்வதேச சமூகம் இலங்கையின் நிலைப்பாட்டை சிரமமின்றி ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கை காணப்படுவதாகவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

இதேவேளை மனித உரிமைகள் நிலைமைய மேம்படுத்த உறுதியான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளதால் இம்முறை இந்த விடயம் கடினமானதாக இருக்காது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (17) நாட்டின் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம்

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களும் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் சட்டங்களைத் திருத்துவதற்கு பல...

தரமற்ற தடுப்பூசி இறக்குமதி:கெஹெலியவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல்...

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட முகமது சுஹைல் விடுதலை!

சமூக ஊடகங்களில் இஸ்ரேலுக்கு எதிரான பதிவை வெளியிட்டதற்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்...