உக்ரைன்-ரஷ்யா போர் Updates; கப்பல் போக்குவரத்து நிறுத்தம்: தரைப்படையெடுப்பு ஆரம்பம்!

Date:

அசோவ் கடலில் உக்ரைனுக்கான கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ரஷ்யா பெலராஸ் எல்லைகளிலிருந்து ரஷ்யா தரைப்படையினர் உக்ரைனுக்குள் படையெடுத்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யா எல்லையை ஒட்டிய கார்கிவ் மாநிலத்திலுள்ள சுகுயேவ் விமானப்படைத் தளத்தின் மீது ரஷ்ய விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளன. இதனால் அப் பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்துள்ளது.

வடக்கே பெலாரசில் இருந்தும் ,வடக்கிலும் கிழக்கிலும் ரஷ்யாவில் இருந்தும் என பல முனைகளிலும் ரஷ்யத் தரைப் படையினர் உக்ரைனுக்குள் படையெடுத்துள்ளதை அந் நாட்டு எல்லை பாதுகாப்பு படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த மோதலில் உக்ரைன் படையினர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு தெற்கே உள்ள அசோவ் கடல் வழியாக அந் நாட்டின் மரியுபோல் துறைமுகத்துக்குக் கப்பல் போக்குவரத்தையும் நிறுத்தி விட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...