உக்ரைன்-ரஷ்யா போர் Updates; ரஷ்யாவுக்கு ஐரோப்பிய ஆணையம் எச்சரிக்கை!

Date:

ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்றும், ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள ரஷ்யாவின் சொத்துக்கள் முடக்கப்படும் என்றும் ஐரோப்பிய ஆணையம் எச்சரித்துள்ளது.

ரஷ்யாவின் இலக்கு உக்ரைன் மாத்திரமல்ல, ஐரோப்பாவின் நிலைத்தன்மையைச் சீர்குலைப்பதும் தான் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உருசுலா வாண்டர் லியன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஐரோப்பாவில் போர் வருவதற்கு காரணம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தான் என்றும்,போரால் ஏற்படும் இழப்புகளுக்கு ரஷ்யாவே பொறுப்பேற்கச் செய்வோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கும் அதன் மக்களுக்கும் துணை நிற்பதாக உறுதியளித்த அவர் ரஷ்யப் பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்யும் வகையில் அதன் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கலந்து பேசிய பின் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும், ஐரோப்பிய நிதிச் சந்தையில் ரஷ்ய வங்கிகளுக்கான வணிகத் தொடர்பை நிறுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...