நாட்டின் நெருக்கடி நிலைமைக்கு அவசர நடவடிக்கை தேவை: எதிர்க்கட்சிகள் அறிக்கை

Date:

நாட்டின் தற்போதைய நெருக்கடியான நிலையை கருத்திற்கொண்டு அரசாங்கம் அவசர ஆக்கபூர்வமான தீர்வொன்றை காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என எதிர்க்கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

அதற்கமைய இந்த விடயம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன உட்பட பலர் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

குறித்த அறிக்கையில், அரசாங்கம் கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ளதை தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் தற்போதைய நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு கூட்டு திட்டமொன்றிற்கான அவசியம் இருப்பதாகவும் அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் தேசிய பொருளாதார கொள்கைக்கு மிகவும் சிறந்த பொருளாதார கொள்கை அவசியம் என்றும் இது தற்போதைய நிலைமைக்கான அடிப்படை காரணங்களுக்கு தீர்வை காண உதவும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசியல் தலைவர்கள் பேச்சுவார்த்தைகள் இலங்கையின் இறையாண்மை கடனை செலுத்துவதை ஒத்திவைப்பதற்கும் கடனை செலுத்துவது குறித்த மீள் கட்டமைப்பை உருவாக்குவதற்கும் பலபடிமுறையிலான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்கவேண்டும் என்ற யோசனையையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.

கபீர் ஹாசிம், ரவூப் ஹக்கீம், திஸ்ஸ விதாரண, எம்.ஏ. சுமந்திரன், ஆர் சம்பந்தன், மனோகணேசன், ஹர்ஸ த சில்வா,ரிஷாத் பதியூதீன், இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...