நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்டோரில் 11 இலட்சம் பேர் கொவிட் தடுப்பூசியை போட்டுக்கொள்ளவில்லை!

Date:

இலங்கையில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களில் 11 இலட்சத்து 70 ஆயிரம் பேர் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எம்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

இதன்படி 20 தொடக்கம் 29 வயதுக்கிடையில் உள்ள இளைஞர், யுவதிகள் 719,000 பேரும் 30 தொடக்கம் 60 வயதுக்குட்பட்டவர்களில் 3 இலட்சத்து. 86 ஆயிரத்து 408 பேரும் இதுவரை கொவிட் தடுப்பபூசியைப் பெற்றுக்கொள்ளவில்லை.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மதிப்பீட்டிலே இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேள 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 64 234 பேர் எந்தவொரு தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை என்றும் சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நாட்டில் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு பின்னர் முழுமையான கொவிட் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளாதவர்களை பொது இடங்களுக்கு அனுமதிக்காதிருப்பதான வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சவூதியில் ரமழான் பிறை தென்பட்டது: நாளை முதல் புனித நோன்பு ஆரம்பம்

சவூதி அரேபியாவில் ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம்...

பங்களாதேஷ் புதிய பிரதமராகப் பதவியேற்றார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் நாட்டின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்றுக் கொண்டார். பங்களாதேஷில் நடைபெற்ற...

“வக்பு சட்டமும் பள்ளிவாசல்கள் மற்றும் வக்புகள் (அவ்காப்) என்பனவற்றின் முகாமைத்துவமும்”  நூல் வெளியீட்டு நிகழ்வு

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும், தற்போதைய இலங்கை வக்பு நியாய சபையின்...

கிராமங்களுக்கு 4G வசதியை விரிவுபடுத்த திட்டம்: அமைச்சரவை அனுமதி

தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத பிரதேசங்கள் மற்றும் குறைந்த தொடர்பாடல் வசதிகளுடன் கூடிய...