நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்டோரில் 11 இலட்சம் பேர் கொவிட் தடுப்பூசியை போட்டுக்கொள்ளவில்லை!

Date:

இலங்கையில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களில் 11 இலட்சத்து 70 ஆயிரம் பேர் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எம்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

இதன்படி 20 தொடக்கம் 29 வயதுக்கிடையில் உள்ள இளைஞர், யுவதிகள் 719,000 பேரும் 30 தொடக்கம் 60 வயதுக்குட்பட்டவர்களில் 3 இலட்சத்து. 86 ஆயிரத்து 408 பேரும் இதுவரை கொவிட் தடுப்பபூசியைப் பெற்றுக்கொள்ளவில்லை.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மதிப்பீட்டிலே இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேள 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 64 234 பேர் எந்தவொரு தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை என்றும் சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நாட்டில் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு பின்னர் முழுமையான கொவிட் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளாதவர்களை பொது இடங்களுக்கு அனுமதிக்காதிருப்பதான வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...

கலாசாரங்களை சீரழிக்கும் LGBTQ சுற்றுலா திட்டங்களை அனுமதிக்க வேண்டாம்:கொழும்பு பேராயர் வேண்டுகோள்

நாட்டில் LGBTQ (ஓரினச்சேர்க்கை) சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்துள்ள...