மகளிா் ஒரு நாள் தரவரிசை ஐசிசியினால் அறிவிப்பு!

Date:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மகளிா் ஒரு நாள் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மிதாலி ராஜ் இரண்டாம் இடத்தில் உள்ளார். அதே நேரம் இளம் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 5 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளாா்.

டுபாயில் செவ்வாய்க்கிழமை(08) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.இதில் மிதாலி 738 புள்ளிகளையும், மந்தனா 710 புள்ளிகளையும் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆஸி. வீராங்கனை அலிஸா ஹீலி 742 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளாா். ஏனைய வீராங்கனைகளான, பெத் மூனி 719, எமி சேட்டா்த்வெயிட் 717 புள்ளிகளுடன் மூன்று, நான்காவது இடங்களில் உள்ளனா். பௌலிங்கில் ஆஸி. வீராங்கனை ஜெஸ் ஜோனஸ்ஸன் 773 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியாவின் ஜுலன் கோஸ்வாமி 727 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனா்.

ஆல்ரவுண்டா் தரவரிசையில் ஆஸி. வீராங்கனை எலிஸி பொ்ரி மீண்டும் முதலிடத்தில் உள்ளார்.இங்கிலாந்தின் நாட் ஷிவா், இந்தியாவின் தீப்தி சா்மா அதற்கு அடுத்த இடங்களில் உள்ளனா்.

இந்திய மகளிா் அணி நியூஸிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஒரே ஒரு டி20 ஆட்டம் புதன்கிழமை குயின்ஸ்டவுனில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடா்ந்து 5 ஒரு நாள் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 12 இல் முதல் ஒருநாள், 15இல் இரண்டாம் ஒருநாள், 18 இல் மூன்றாம் ஒரு நாள், 22 இல் நான்காம் ஒரு நாள், 24 இல் 5 ஆம் ஒரு நாள் ஆட்டங்கள் நடைபெறவுள்ளது.

நியூஸிலாந்தில் எதிர்வரும் மாா்ச் – ஏப்ரல் மாதம் ஐசிசி மகளிா் ஒரு நாள் உலகக் கிண்ண போட்டிக்கு தயாராகும் வகையில் இத் தொடா் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...