மூத்த ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார காலமானார்!

Date:

சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார (71) இன்று காலமானார்.

சிறுநீரகக் கோளாறு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

பத்மகுமார சுமார் மூன்று மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

பத்மகுமார இலங்கையின் ஊடகத் துறையில் மற்றும் பத்திரிகையின் ஒரு முக்கிய நபராக இருந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான ‘முல் பிடுவ’ மற்றும் ‘லோக சித்தியம’ ஆகியவற்றில் மிகவும் பிரபலமிக்க ஒருவராவார்.

அவர் லக்பிம பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் மற்றும் லேக் ஹவுஸின் முன்னாள் தலைவரும் ஆவார்.

இதேவேளை, சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனில் மாதவ பிரேமதிலக நேற்றைய தினம் காலமானமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...

சவூதியில் 9 நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து: அதிகமானவை ஒரு வருடத்துக்குள்!

கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி...