விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு பிசிசிஐ விசேட ஓய்வை அறிவித்தது!

Date:

விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு பிசிசிஐ 10 நாட்களுக்கு விளையாட்டிலிருந்து ஓய்வு வழங்கியுள்ளது.

எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் இலங்கை அணிக்கு எதிரான போட்டி தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இந்த ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. குறித்த தொடரில் விராட் டி 20 தொடரில் களமிறங்காமல் டெஸ்ட் போட்டி தொடரில் மட்டும் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு அளிக்கப்பட்டதையடுத்து கடந்த 2 வது டி20 போட்டியில் அரை சதம் விளாசி அணியின் தொடர் வெற்றிக்கு காரணமாக இருந்த இருவருமே இன்றைய கடைசி டி20 போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை. அவர்கள் இன்று சொந்த ஊர் திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அரச விடுமுறையில் மாற்றம்!

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம்...

A/L பரீட்சை விண்ணப்ப காலம் நள்ளிரவுடன் நிறைவு

2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது...

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...