ஹிஜாப் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

Date:

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் தொடர்பான வழக்கின் விசாரணை நாளையதினம் (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.

நாளைய விசாரணையைப் பொறுத்தே கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு வரையிலான பாடசாலைகள் நாளை திறக்கப்படுகின்றன. எனினும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு 16ஆம் திகதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, கல்லூரிகள் திறப்பது குறித்து நீதிமன்றத்தின் கருத்தை அறிந்த பின்னரே முடிவு எடுக்கப்படும் என்று பொம்மை தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு இறுதித்தீர்ப்பு வரும் வரை கல்லூரிகளுக்கு மதரீதியான ஆடைகளை அணிந்து வருவதற்கு இடைக்காலத் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...