உக்ரைனின் நான்கு நகரங்களில் போர் நிறுத்தத்தை அறிவித்தது ரஷ்யா!

Date:

உக்ரைனில் நான்கு நகரங்களில் தங்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது.

இதற்கிடையில் தொடர்ந்து நடைபெற்று வரும் சண்டையால் கீவ், கார்கிவ், மரியபோல், சுமி ஆகிய நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டதுடன் போர் நிறுத்தப்படுவதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகரான கீவ் நகரை பிடிக்க ரஷ்ய திட்டமிட்டுள்ளது. கடல்வழி, தரைவழி, வான்வழி என மூன்று வழியாகவும் அதிரடி தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியிருந்தார்.

உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு மக்கள் வெளியேறினால் மட்டுமே, அவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியும் என்ற நிலை இருந்தது. இதனால் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், மக்கள் வெளியேறும் வகையில் போரை நிறுத்த வேண்டும் என ரஷ்யாவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அதனை ஏற்றுக்கொண்டு கீவ், கார்கிவ், மரியபோல், சுமி ஆகிய நான்கு நகரங்களில் போர் நிறுத்தப்படுவதாக ரஷ்ய அறிவித்துள்ளது.

இந்திய நேரப்படி மதியம் 12.30 மணியில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்காக மனிதாபிமான பாதை திறந்து விடப்படும் என ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது.

இதேவேளை உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு மக்கள் வெளியேறினால் மட்டுமே அவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியும் என்ற நிலை இருப்பதால் மக்கள் வெளியேறும் வகையில் போரை நிறுத்த வேண்டும் என பிரான்ஸ் அதிபர் ரஷ்யாவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதன்படி குறிப்பிட்ட நகரங்களில் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ள ரஷ்யா படையினர் அந்த நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற பாதைகளை திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!

2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு...

இன்று மழை மற்றும் காற்றுடனான வானிலை நிலவும்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடனான வானிலை...

கொழும்பில் நாளை இடம்பெறவுள்ள ‘அல் அகீதா அஸ் – ஸஹீஹா’ நூல் வெளியீட்டு மாநாடு!

இலங்கையிலுள்ள பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவரான அல்-ஆலிம் சி.ஐ.எம். அஸ்மீர்...

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதித்து...