‘எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர குறைந்தது ஏழு மாதங்களாகும்’: காமினி லொகுகே

Date:

தற்போதைய எரிபொருள் நெருக்கடி மற்றும் எரிவாயு பிரச்சினை முடிவுக்கு கொண்டுவர குறைந்தது இன்னும் ஏழு மாதங்கள் ஆகும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

அதற்கமைய உலக அரங்கில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘உலகளாவிய பொருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நாட்டிற்கு டொலர்களை கொண்டு வருவதற்கு தேங்காய்களை விற்க முடியாது.

டொலர்களை கொண்டு வருவதில் உள்ள சிரமத்தின் ஆரம்ப கட்டத்தில் உள்ளோம்’ என அமைச்சர் லொகுகே தெரிவித்தார்.

எனவே சுற்றுலாத்துறை மற்றும் ஏற்றுமதியை பலப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜனாதிபதி முயற்சிக்கின்றார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய பிரச்சினைகளை சமாளிப்பதற்கு அரசாங்கத்திற்கு குறைந்தது ஏழு முதல் எட்டு மாதங்கள் ஆகும் என அமைச்சர் லொக்குகே தெரிவித்தார்.

அதிகளவிலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இருக்கவில்லை என்பதுடன் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குறைந்தளவில் எரிபொருள் இருந்தாலும் அதனை பெற்றுக்கொள்ள பல மணித்தியாலங்கள் மக்கள் காத்திருக்க வேண்டி ஏற்பட்டது.

இந்நிலையில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில், பொறுமையை இழந்த மக்கள் தமது எதிர்ப்பினை வௌியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...