கட்டுகஸ்தோட்டை பகுதி தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

Date:

கண்டி, கட்டுகஸ்தோட்டை மெனிக்கும்புர பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் தந்தை, மகள் மற்றும் மருமகன் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் தாய் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் நான்கு வீடுகளும் தீயில் சேதமடைந்துள்ளதுடன் தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், மூன்று பேர் உயிரிழந்ததற்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பெரும்பாலான இடங்களில் பி.ப. 1.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (18) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, தென் மாகாணங்களில்...

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: காலம் காலமாக அரசாங்கம் மாறினாலும் பௌத்த மக்களின் உரிமை மாறாது: ஞானசார தேரர்.

திருகோணமலையில் வலுத்துள்ள புத்தர் சிலை சர்ச்சைக்கு மத்தியில் கலகொட அத்தே ஞானசார...

புதிய வவுச்சர் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான காலணிகள்!

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு, பாதணிகளை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால்...

கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

கிராமிய பாலங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்...