கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம்: காமினி லொக்குகே

Date:

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்புக்களை விநியோகிப்பதற்காக பெற்றோல் மற்றும் டீசல் கொண்ட எரிபொருள் பவுசர்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே இன்று அறிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் குறிப்பிட்ட அமைச்சர், விநியோகத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பல பகுதிகளில் நீண்ட வரிசைகள் தொடர்கின்றன.

அனைத்து பெற்றோல் தாங்கிகளும் நேற்று முன்தினமே செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவித்த அவர், இன்று முதல் அந்த பவுசர்கள் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளன என்றார்.

இதன்மூலம் கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் இன்று பிற்பகலில் நிறைவடையும் என அமைச்சர் லொக்குகே தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் தலா ஒரு  பவுசர்  டீசல் மற்றும் பெற்றோல் வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள டீசலுடன் கூடிய கப்பலை நாளை விடுவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

Popular

More like this
Related

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...