பசில் இந்த மாத இறுதியில் இந்தியா பயணம்!

Date:

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில் தொலைபேசி கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான தகவல்களை கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ளது.

நிதியமைச்சரும் இந்திய வெளிவிவகார அமைச்சரும் சிறிது நேரத்திற்கு பயனுள்ள மற்றும் சுமுகமான தொலைபேசி கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

சாத்தியமான அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்தார்.

அதேநேரம், அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயத்திற்கான பரஸ்பர வசதியான திகதியை இந்த மாதத்தின் இரண்டாம் பகுதியில் இறுதி செய்ய அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...