பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்: மேல் மாகாண கல்வித் திணைக்களம்!

Date:

அச்சிடுவதற்கு கடதாசி தாள்கள் பற்றாக்குறையால் பிற்போடப்பட்ட மேல்மாகாண அரச பாடசாலைகளின் தரம் 09, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான தவனை பரீட்சைகள் முன்னர் திட்டமிட்டபடி நடைபெறும் என மேல் மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், வினாத்தாள்களை அச்சிடுவதற்கு தேவையான வினாத்தாள்களை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாகவும் மாகாண கல்வித்திணைக்களம் இதன்போது, சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, மேல்மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் தரம் 09, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தவனைப் பரீட்சைகள் முன்னர் திட்டமிட்டபடி மார்ச் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், பரீட்சைகள் முன்னர் வெளியிடப்பட்ட அதே கால அட்டவணையின் பிரகாரம் நடைபெறும்.

இதற்கு மேலதிகமாக தரம் 06, 07 மற்றும் 08 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தவனைப் பரீட்சைகள் இன்று (21) முதல் வழமைபட போன்று இடம்பெறும் என மாகாண கல்வித்திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேவையான காகித தாள்கள் மற்றும் மை இறக்குமதி செய்ய அச்சுப் பொறிகள் அந்நியச் செலாவணியைப் பெற முடியாததால், கடுமையான காகிதத் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதேவேளை எதிர்வரும் வாரம் ஆரம்பமாகவிருந்த பருவத் தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதாக கல்வி அதிகாரிகள் கடந்த வாரம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...