பாலமுனையில் முஸ்லிமொருவரின் காணியில் அத்துமீறி பௌத்த விகாரை அமைக்க முயற்சி: மக்கள் எதிர்ப்பால் பதற்ற நிலைமை

Date:

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை முள்ளிமலை பிரதேசத்தில் முஸ்லிமொருவருக்கு சொந்தமான காணியொன்றில் விகாரையொன்றை அமைக்க முயற்சி செய்த தேரர்கள் குழுவொன்றுக்கு எதிராக இடம்பெற்ற எதிர்ப்பு நிலைமையால் பதற்ற நிலை உருவாகியது.

தனியார் காணியில் புராதன சின்னங்கள் உள்ள காணியென பொய்யான பரப்புரையை முன்வைத்து புத்தர் சிலையொன்றை நிறுவ பௌத்த பிக்குகளும், சிங்கள இளைஞர்கள் சிலருக்கு எதிராக அப்பிரதேச மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக அங்கு வருகைத் தந்த சிங்கள இளைஞர்கள் சிலர் சிலை நிறுவும் ஏற்பாடுகளை செய்து வந்ததாகவும் இன்று காணி பூஜை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தபோதே இந்த முரண்பாட்டு நிலை தோன்றியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதிக்கு நேரடியாக வருகைத் தந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல். தவம், அட்டாளைசேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ. அன்ஸில், அட்டாளைசேனை பிரதேச சபை தவிசாளர் ஏ. அமானுல்லா, அட்டாளைசேனை பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச மக்கள் பலரும் வெளியிட்ட எதிர்ப்பை அடுத்து அக்கரைப்பற்று பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினரின் தலையீடுகளுடன் அரசாங்க அதிபரூடாக பிரச்சினையை தீர்க்க முடிவு செய்யப்பட்டதுடன் அங்கிருந்து எல்லோரும் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விகாரை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இடம் தனியாருக்குச் சொந்தமானது என்பது தொடர்பான ஆவணங்களை அங்கு வந்திருந்த பௌத்த பிக்குகளிடம் காட்டி, குறித்த இடத்தில் பௌத்த விகாரை அமைக்க முடியாது என்பதை அங்கு வந்திருந்த முக்கியஸ்தர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி, தமது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தமையை அடுத்து, அங்கு வந்த பௌத்த பிக்குகளும் அவர்களின் குழுவினரும் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர்.

Popular

More like this
Related

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...

தேசபந்துவுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

தேசபந்து தென்னகோன் மற்றும் பிற சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு டிசம்பர்...