பெட்ரோலிய களஞ்சியப் பிரிவின் தலைவராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நியமனம்!

Date:

இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன களஞ்சியசாலை பிரிவின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற ஜெனரல் எம்.ஆர். டபிள்யூ.டி. சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் தலைவர் நாலக பெரேரா தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம்.ஆர்.டபிள்யூ. டி சொய்சா, காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னைய தலைவராக இருந்தார்.

இதேவேளை, நீடித்து வரும் எரிபொருள் நெருக்கடி நாளையுடன் முடிவுக்கு வரும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே நம்புகின்றார்.

தற்போது இரண்டு கப்பல்களில் இருந்து மொத்தம் 65,000 மெட்ரிக் தொன் எரிபொருள் இறக்கப்பட்டுள்ளது, மற்றுமொரு எண்ணெய் தாங்கி இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...