வாகன விபத்தில் குழந்தை உயிரிழப்பு!

Date:

ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரெலபனாவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. ரெலபனாவ பாடசாலைக்கு முன்பாக ரெலபனாவ நோக்கிச் பெண் ஒருவரால் ஓட்டிச் செல்லப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியின் பின்பகுதியில் பயணித்த குழந்தையொன்று படுகாயமடைந்த நிலையில் ஹொரவ்பொத்தானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதே பகுதியில் வசித்து வந்த ஒன்றரை வயது குழந்தையே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளது. அக்குழந்தையின் அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியை செலுத்தி வந்த பெண்ணின் அதிவேகமும் கவனக்குறைவும் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதினையும் அவதானிக்க முடிகின்றது.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...