வாகன விபத்தில் குழந்தை உயிரிழப்பு!

Date:

ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரெலபனாவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. ரெலபனாவ பாடசாலைக்கு முன்பாக ரெலபனாவ நோக்கிச் பெண் ஒருவரால் ஓட்டிச் செல்லப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியின் பின்பகுதியில் பயணித்த குழந்தையொன்று படுகாயமடைந்த நிலையில் ஹொரவ்பொத்தானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதே பகுதியில் வசித்து வந்த ஒன்றரை வயது குழந்தையே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளது. அக்குழந்தையின் அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியை செலுத்தி வந்த பெண்ணின் அதிவேகமும் கவனக்குறைவும் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதினையும் அவதானிக்க முடிகின்றது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...