அத்தியாவசியப் பொருட்களுக்காக சீனாவிடம் மேலதிக நிதி உதவியை கோரியது இலங்கை!

Date:

இலங்கை சீனாவிடம் கடன்தொகையொன்றை பெறுவதற்கான பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் அந்நியச் செலாவணி நெருக்கடி, கடன் கொடுப்பனவுகளை ஒத்திவைத்தல் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கடன் ஏற்பாடு உள்ளிட்ட மேலதிக நிதி உதவியை இலங்கை சீனாவிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் இலங்கை சீன வங்கிகளுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் கடன் தவணையாக செலுத்த வேண்டியுள்ளது.

இந்நிலையில், நாடு தற்போதைய நெருக்கடியிலிருந்து வெளியேறும் வரை இந்த கொடுப்பனவுகளை மீண்டும் திட்டமிடுவதற்கு அரசாங்கம் உதவி கோரியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, உள்ளூர் தொழில்களுக்கு தேவையான மூலப்பொருட்களை சீனாவில் இருந்து வாங்குவதற்கு தனியான கடன் ஏற்பாட்டையும் அரசாங்கம் கோரியுள்ளது.

மேலும் இந்த விடயம் தொடர்பில் இலங்கை மேலும் நிதியுதவி கேட்டுள்ளது என்றும், இரு தரப்பும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் மட்டுமே உறுதி செய்ய முடியும் என சீனத் தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக இலங்கை இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுள்ளது.

மேலும், இந்தியாவில் இருந்து எரிபொருளை வாங்க 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...