இன்றைய மின்வெட்டு அட்டவணை வெளியிடப்பட்டது!

Date:

இன்றைய தினம் (மார்ச் 08) மின்வெட்டு நேற்றுபோலவே மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு தாம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, அட்டவணையில் உள்ள P, Q, R, S, T, U, V மற்றும் W ஆகிய குழுக்களின் கீழ் உள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேரமும் மின் தடை ஏற்படும்.

E மற்றும் F குழுக்களின் கீழ் உள்ள பகுதிகளில், நாளை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 5 மணி நேரமும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டரை மணி நேரமும் மின்வெட்டு ஏற்படும்.

நிலவும் மின்வெட்டு காரணமாக மின்சார நுகர்வோருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...