இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து மத்திய வங்கி ஆளுநருடன் ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடல்!

Date:

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர் அடங்கிய குழு இன்றைய தினம் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலை சந்தித்துள்ளது.

அதற்கமைய அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில், இலங்கை மத்திய வங்கி நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு 8 முக்கிய விடயங்களை முன்மொழிந்ததாகவும், அதற்கு இன்றுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்றும் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பொருளாதார சுமையை குறைக்க பொருளாதார குழு பல திட்டங்களை முன்வைத்துள்ளதாகவும், அதில் ஒன்று சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவது என்றும் ஹர்ஷ குறிப்பிட்டுள்ளார்.

‘அவசர கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வை நாங்கள் முன்மொழிந்தோம் மற்றும் இலங்கை கடனை மறுசீரமைக்க திட்டமிட்டுள்ளோம்.

சர்வதேச நாணய நிதியத்தை ஈடுபடுத்த நாங்கள் முன்மொழிந்தோம். தொற்றுநோய்-தடுப்புக்காலத்தை தீவிரமாக பரிசீலிக்குமாறு அவர்களிடம் கூறினோம், வங்கிகளும் வணிகங்களும் அதை எப்படி சமாளிக்கும். சில உதவிகளை பரிசீலிக்க வேண்டும்,’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...