இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து மத்திய வங்கி ஆளுநருடன் ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடல்!

Date:

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர் அடங்கிய குழு இன்றைய தினம் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலை சந்தித்துள்ளது.

அதற்கமைய அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில், இலங்கை மத்திய வங்கி நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு 8 முக்கிய விடயங்களை முன்மொழிந்ததாகவும், அதற்கு இன்றுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்றும் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பொருளாதார சுமையை குறைக்க பொருளாதார குழு பல திட்டங்களை முன்வைத்துள்ளதாகவும், அதில் ஒன்று சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவது என்றும் ஹர்ஷ குறிப்பிட்டுள்ளார்.

‘அவசர கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வை நாங்கள் முன்மொழிந்தோம் மற்றும் இலங்கை கடனை மறுசீரமைக்க திட்டமிட்டுள்ளோம்.

சர்வதேச நாணய நிதியத்தை ஈடுபடுத்த நாங்கள் முன்மொழிந்தோம். தொற்றுநோய்-தடுப்புக்காலத்தை தீவிரமாக பரிசீலிக்குமாறு அவர்களிடம் கூறினோம், வங்கிகளும் வணிகங்களும் அதை எப்படி சமாளிக்கும். சில உதவிகளை பரிசீலிக்க வேண்டும்,’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

டிரம்ப்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டதற்கு வெள்ளை மாளிகை கடும் எதிர்ப்பு!

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள வெனிசுவேலாவில் மக்களின் ஜனநாயக உரிமைகளை...

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...