தற்போது இலங்கையில் தங்கியுள்ள உக்ரைன் பிரஜைகள் மற்றும் ரஷ்யர்களுக்கான வீசாவின் செல்லுபடியை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதேநேரம், இந்த சுற்றுலா பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விசா நீட்டிப்பு இரண்டு மாதங்களுக்கு செல்லுபடியாகும்.
தற்போது, இலங்கையில் 1463 ரஷ்ய சுற்றுலாப் பயணிகளும், 3993 உக்ரைன் சுற்றுலாப்பயணிகளும் தங்கியிருக்கின்றனர்.
இந்நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமையால் அவர்களால் மீண்டும் தமது நாடுகளுக்குச் செல்வதற்கு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனைக்கருத்தில் கொண்டு குறித்த சுற்றுலாப் பயணிகளின் வீசா காலப்பகுதியை கட்டண அறவீடுகள் இன்றி இரண்டு மாத காலத்திற்கு நீடிப்பதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை வழங்கியுள்ளது.