உக்ரைனின் நான்கு நகரங்களில் போர் நிறுத்தத்தை அறிவித்தது ரஷ்யா!

Date:

உக்ரைனில் நான்கு நகரங்களில் தங்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது.

இதற்கிடையில் தொடர்ந்து நடைபெற்று வரும் சண்டையால் கீவ், கார்கிவ், மரியபோல், சுமி ஆகிய நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டதுடன் போர் நிறுத்தப்படுவதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகரான கீவ் நகரை பிடிக்க ரஷ்ய திட்டமிட்டுள்ளது. கடல்வழி, தரைவழி, வான்வழி என மூன்று வழியாகவும் அதிரடி தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியிருந்தார்.

உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு மக்கள் வெளியேறினால் மட்டுமே, அவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியும் என்ற நிலை இருந்தது. இதனால் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், மக்கள் வெளியேறும் வகையில் போரை நிறுத்த வேண்டும் என ரஷ்யாவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அதனை ஏற்றுக்கொண்டு கீவ், கார்கிவ், மரியபோல், சுமி ஆகிய நான்கு நகரங்களில் போர் நிறுத்தப்படுவதாக ரஷ்ய அறிவித்துள்ளது.

இந்திய நேரப்படி மதியம் 12.30 மணியில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்காக மனிதாபிமான பாதை திறந்து விடப்படும் என ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது.

இதேவேளை உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு மக்கள் வெளியேறினால் மட்டுமே அவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியும் என்ற நிலை இருப்பதால் மக்கள் வெளியேறும் வகையில் போரை நிறுத்த வேண்டும் என பிரான்ஸ் அதிபர் ரஷ்யாவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதன்படி குறிப்பிட்ட நகரங்களில் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ள ரஷ்யா படையினர் அந்த நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற பாதைகளை திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...