‘உலகளாவிய போராட்டத்தை முன்னெடுக்குமாறு பொதுமக்களிடம், உக்ரைன் ஜனாதிபதி வேண்டுகோள்!

Date:

ரஷ்யாவிற்கு எதிராக உலகளாவிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உலக மக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம், உக்ரைன் சின்னங்களுடன் நாட்டின் முக்கிய இடங்களிலும், தெருக்களிலும் உக்ரைனுக்காக போராட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

உக்ரேனுக்கு ‘பயனுள்ள மற்றும் கட்டுப்பாடற்ற’ உதவிகளை வழங்க நேட்டோவுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கிடையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறுகையில், மாஸ்கோ தனது எரிவாயுவை ‘நட்பற்ற நாடுகளுக்கு’ ரூபிள்களில் விற்க திட்டமிட்டுள்ளது.

நேட்டோ, ஜி- 7 மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடுகளுக்கு முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பிரஸ்ஸல்ஸ் வந்தடைந்தார். அவர் ரஷ்யாவிற்கு எதிராக மேலும் பொருளாதார தடைகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. ரஷ்யாவை எதிர்கொண்டு ஒரு மாதம் தொடர்ந்து போராடி வரும் நமது தைரியத்தை பாராட்டி மக்கள் அனைவரும் வீதிகளுக்கு வந்து தங்களின் ஆதரவை தெரிவியுங்கள் ஜெலன்ஸ்கி கேட்டு கொண்டுள்ளார்.

மேலும் உலகம் முழுவதும் மக்கள் தங்களின் ஆதரவை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போர் காரணமாக உக்ரைனின் மக்கள் தொகையில் கால் பகுதியினர் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் நடைபெற உள்ள நேட்டோ, ஜி7 மற்றும் ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாடுகளில் நண்பர்கள் யார், நம்மை காட்டிக் கொடுத்தவர்கள் யார் என்று தெரிய வரும் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர உலக மக்கள் அனைவரும் வீதிகளில் இறங்கி போராட வேண்டும் என்று ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் உக்ரைனுக்கு மேற்கு உலக நாடுகள் ஆயுதங்கள் வழங்கவில்லை என்றும் ஜெலன்ஸ்கி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு அவர் கூறியதாவது, ‘இந்த நாளில் இருந்து நீங்கள் உக்ரைனை ஆதரிக்கிறீர்கள் என்பதை காட்டுங்கள்.உங்கள் அலுவலகங்கள், உங்கள் வீடுகள், உங்கள் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து வாருங்கள்.அமைதியின் பெயரில் வாருங்கள்.

உக்ரைனை ஆதரிக்க, சுதந்திரத்தை ஆதரிக்க வாழ்க்கையை ஆதரிக்க உக்ரேனிய சின்னங்களுடன் வாருங்கள்.உங்கள் தெருக்களுக்கு வாருங்கள்.

சுதந்திரம் முக்கியம், அமைதி முக்கியம், உக்ரைன் முக்கியமானது. மார்ச் 24 முதல் உங்கள் நகரங்களில் போரை நிறுத்த விரும்பும் அனைவரும் ஒன்றாக திரளுங்கள்,’என்றார்.

Popular

More like this
Related

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...

வரலாற்றில் முதன்முறையாக வதிவிட விசாவை வழங்கிய இலங்கை!

புதிய திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட...

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற நிலை

நாளை, (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...