எரிவாயு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு!

Date:

எரிவாயுக்கான கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

நேற்றிரவு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதாக எரிவாயு விநியோகஸ்தர் தெரிவித்தார்.

கெரவலப்பிட்டியவில் உள்ள லிட்ரோ எரிவாயு சேமிப்பு களஞ்சியசாலையிலிருந்து இறக்குதல், நிரப்புதல் மற்றும் விநியோகம் ஆகியவை நேற்று இரவு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு தெரிவித்துள்ளது.

இப்பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதால் எரிவாயு விநியோகம் இன்று வழமைக்குத் திரும்பும் எனவும் டொலர் நெருக்கடி காரணமாக முதன்மை எரிவாயு விநியோகஸ்தர்களால் இலங்கையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இலங்கை கடற்பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் இருந்து 2500 மெற்றிக் தொன் எரிவாயு இறக்கப்பட்டதாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே எரிவாயு விநியோகம் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவித்த அவர், பிற்பகல் வேளையில் நுகர்வோருக்கு தேவையான எரிவாயு கையிருப்புகளை நிறுவனத்தினால் வழங்க முடிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை சமையல் எரிவாயு விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக நுகர்வொர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன நேற்று பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஒருபோதும் இல்லாத அளவுக்கு உலக சந்தையில் எரிவாயு விலை பெருமளவில் உயர்வடைந்துள்ளதாகவும், இந்நிலையில் அதன் விலையை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...