ஐ.நா. மனித உரிமையாளர் ஆணையாளரை சந்தித்த இலங்கை பிரதிநிதிகள்!

Date:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லெட்டினை இலங்கைப் பிரதிநிதிகள் குழுவினர் சந்தித்துள்ளனர்.

ஜெனிவாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை குழுவினர் நேற்றிரவு(புதன்கிழமை) சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பின்போது, பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும் இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் விடயம் தொடர்பில் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் மனித உரிமைகள் ஆணையாளர் வெளிவிவகார அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்நிலையில் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில்நாளை கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நீதியமைச்சர் பி.சி. அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...