ஐ.நா. மனித உரிமையாளர் ஆணையாளரை சந்தித்த இலங்கை பிரதிநிதிகள்!

Date:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லெட்டினை இலங்கைப் பிரதிநிதிகள் குழுவினர் சந்தித்துள்ளனர்.

ஜெனிவாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை குழுவினர் நேற்றிரவு(புதன்கிழமை) சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பின்போது, பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும் இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் விடயம் தொடர்பில் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் மனித உரிமைகள் ஆணையாளர் வெளிவிவகார அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்நிலையில் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில்நாளை கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நீதியமைச்சர் பி.சி. அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

Popular

More like this
Related

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...