‘டீசலுக்காக மக்கள் வரிசையில் நிற்க வேண்டாம்’: பெற்றோலிய கூட்டுதாபனம் கோரிக்கை

Date:

இன்றும் நாளையதினமும் (மார்ச் 31) டீசல் போதுமானளவு கையிருப்பில் இல்லாததனால் எரிபொருள் நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம் என பொதுமக்களிடம் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதன் தலைவர் சுமித் விஜேசிங்கவின் கூற்றுப்படி, நேற்று (மார்ச் 29) மாலை திட்டமிடப்பட்டிருந்த 37,500 மெற்றிக் தொன் டீசல் ஏற்றுமதிக்கான இறக்கும் பணி திட்டமிட்டபடி நடைபெறவில்லை.

எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளுக்கான டீசல் விநியோகம் தடையின்றி தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பெட்ரோல் விநியோகம் வழமைப் போன்று எவ்வித தட்டுப்பாடும் இன்றி தொடரும் என அதன் தலைவர் மேலும் தெரிவித்தார்.

எனினும். எரிபொருள் நிலையங்களில் அதிகமான மக்கள் வரிசைகளில் நிற்பதை அவதானிக்க முடிந்துள்ளதுடன் எரிபொருள் விரைவாக முடிந்து விடுவதாகவும் வாகன சாரதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழைக்கான சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...