தேசிய பொருளாதார சபைக்கு உதவும் ஆலோசனைக் குழுவிற்கு மேலும் இரு உறுப்பினர்கள் நியமனம்!

Date:

தேசிய பொருளாதார சபைக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவில் மேலும் இரு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதன்படி அசோக பத்திரகே மற்றும் மொஹான் பண்டிதகே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரண்டு புதிய உறுப்பினர்களுடன் தேசிய பொருளாதார கவுன்சிலுக்கு உதவ நியமிக்கப்பட்ட குழுவில் 16 பேர் உள்ளனர்.

நேற்றையதினம், தேசிய பொருளாதார சபைக்கு உதவுவதற்காக ஆலோசனைக் குழு ஒன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நேற்றையதினம், இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

குறித்த குழுவின் உறுப்பினர்களாக, 01. பேராசிரியர் எச்.டி கருணாரத்ன, 02.பேராசிரியர் ஷிரந்த ஹீன்கெந்த, 03. கலாநிதி துஷ்னி வீரகோன், 04. தம்மிக்க பெரேரா, 05. கிரிஷான் பாலேந்திர, 06. அஷ்ரப் உமர், 07. கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, 08. விஷ் கோவிந்தசாமி, 09. எஸ்.ரங்கநாதன், 10. ரஞ்சித் பேஜ் 11. சுரேஷ் டி மெல், 12. பிரபாத் சுபசிங்க, 13. துமிந்த ஹுலங்கமுவ, 14. சுஜீவ முதலிகே. தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...