பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்: மேல் மாகாண கல்வித் திணைக்களம்!

Date:

அச்சிடுவதற்கு கடதாசி தாள்கள் பற்றாக்குறையால் பிற்போடப்பட்ட மேல்மாகாண அரச பாடசாலைகளின் தரம் 09, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான தவனை பரீட்சைகள் முன்னர் திட்டமிட்டபடி நடைபெறும் என மேல் மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், வினாத்தாள்களை அச்சிடுவதற்கு தேவையான வினாத்தாள்களை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாகவும் மாகாண கல்வித்திணைக்களம் இதன்போது, சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, மேல்மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் தரம் 09, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தவனைப் பரீட்சைகள் முன்னர் திட்டமிட்டபடி மார்ச் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், பரீட்சைகள் முன்னர் வெளியிடப்பட்ட அதே கால அட்டவணையின் பிரகாரம் நடைபெறும்.

இதற்கு மேலதிகமாக தரம் 06, 07 மற்றும் 08 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தவனைப் பரீட்சைகள் இன்று (21) முதல் வழமைபட போன்று இடம்பெறும் என மாகாண கல்வித்திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேவையான காகித தாள்கள் மற்றும் மை இறக்குமதி செய்ய அச்சுப் பொறிகள் அந்நியச் செலாவணியைப் பெற முடியாததால், கடுமையான காகிதத் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதேவேளை எதிர்வரும் வாரம் ஆரம்பமாகவிருந்த பருவத் தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதாக கல்வி அதிகாரிகள் கடந்த வாரம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு மாற்றாக காகிதப் பைகளுக்கு பரிந்துரை!

பொலித்தீன் பைகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளைத் தயாரிக்கும் முயற்சியில்...

மாணவர்கள் மீதான ஒடுக்குமுறை: பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் குற்றவாளி என தீர்ப்பு!

பங்களாதேஷ் வன்முறையில் இளைஞர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக்...

கெஹெலிய குடும்பத்திற்கு எதிராக 3 வழக்குகளில் குற்றப்பத்திரம் தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல, மகள்...

சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பம்!

சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத்...