பல முக்கிய கட்சிகளின் பங்கேற்பின்றி சர்வ கட்சி மாநாடு ஆரம்பம்

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் சர்வகட்சி மாநாடு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் இந்த மாநாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 27 அரசியல் கட்சிகளுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜன பலவேகய மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி ஆகியன மேற்படி மாநாட்டைப் புறக்கணித்துள்ளன.

மேலும், பிவித்துரு ஹெல உறுமய, ஜனநாயக இடதுசாரி முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் ஒன்றிணைந்து மன்றத்தை புறக்கணிக்க தீர்மானித்துள்ளன.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகையை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண மற்றும் மற்றும் தேசிய சுதந்திர முன்னணி உட்பட அரசாங்கத்துடன் இணைந்துள்ள 11 அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி அத்துரலியே இரத்தின தேரர் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

மேலும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, லங்கா சமாமஜக்கட்சி, எமது மக்கள் சக்தி கட்சி, ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, தமிழ் அரசுக்கட்சி, புளொட், ஐக்கிய தேசியக்கட்சி ஆகியன மாநாட்டில் பங்கேற்றுள்ளன.

Popular

More like this
Related

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் விழாக்களை எளிமையான நடத்துங்கள்: கல்வி அமைச்சு

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் பல்வேறு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு முன்னைய அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து...

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய பல்கலைக்கழகம் இடையே புதிய கல்விசார் ஒத்துழைப்பு

சர்வதேச ரீதியிலான கல்வித் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், கொழும்பு பல்கலைக்கழகம்...

விடுமுறை காலச் சுற்றுலாக்களின் போது முஸ்லிம் சமூகம் பேண வேண்டிய ஒழுக்கக்கோவைகள்: உலமா சபை விசேட வழிகாட்டல்கள்

விடுமுறை காலங் களில் மேற்கொள்ளப் படும் சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களின் போது...

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்கள் நிதியுதவி!

நான்காண்டு கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், ஐந்தாவது...