பெரசிட்டமோல் மாத்திரைக்கான அதிகபட்ச சில்லறை விலை!

Date:

பெரசிட்டமோல் மாத்திரையின் விலையை அதிகரித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது

500Mg பெரசிட்டமோல் மாத்திரையின் அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதன்படி, 500Mg பெரசிட்டமோல் மாத்திரையின் விலையானது, ரூ. 2.30 ஆகும். முன்னதாக, 500mg பெரசிட்டமோல் மாத்திரை ரூ. 1.71ஆக இருந்தது.

அதற்கமைய பெப்ரவரி 28, 2022 முதல் அமுலுக்கு வரும் வகையில் 500mg பெரசிட்டமோல் மாத்திரைகளின் அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் எதிர்வரும் 4 வாரங்களுக்கு பின்னர் அதிகளவிலான மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என இலங்கை ஒளடத ஒன்றியத்தின் தலைவர் ஏ.ஜே.பஸ்நாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக மருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நாணய கடிதங்கள் விடுவிக்கப்படாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...