கொள்ளுப்பிட்டி பகுதியில் நேற்றையதினம் மெழுகுவர்த்தி விழிப்புணர்வு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விழிப்புணர்வு போராட்டம், இரவு 7 முதல் 8 மணி வரை இடம்பெற்றிருந்தது.
சமூக அக்கறை கொண்ட பெண்கள, மற்றும் மக்கள் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பொருளாதார நெருக்கடி, மின்வெட்டு, எரிவாயு மற்றும் எரிபொருளின் நீண்ட வரிசை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தீர்வு கோரி இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
அமைதியான முறையில் இடம்பெற்றிருந்த இந்த விழிப்புணர்வு போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் கலந்துகொண்டதுடன் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வொன்றை வழங்குமாறு கோரியிருந்தனர்.