மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் பேரழிவு ஏற்படும்: உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்துள்ள அணு ஆயுதங்கள்!

Date:

மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் அணு ஆயுதங்களால் பேரழிவு ஏற்படும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதால் தீவிரமைடைந்து வரும் நிலையில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனை சுற்று வளைத்து ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்துவதால் அதிகளவான பேரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளது.

நாட்டைப் பாதுகாக்க உக்ரைன் படையினர் கடுமையாக போராடி வருவதுடன் தமது நாட்டுக்குள் நுழைந்த 6000 ரஷ்ய படையினரை கொன்றுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு படைதரப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலைமையில் உக்ரைனுக்கு நட்பு நாடுகள் ஆயுத உதவிகளை வழங்க முன்வந்துள்ளன.

இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.

எனினும் மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும் மூன்றாம் உலகப் போரில் அணு ஆயுதற்களே அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் நகரங்களை பிடிக்க ரஷ்யா தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ள நிலையில் இப்போது எல்லையில் அணு ஆயுதங்களையும் ரஷியா குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய உக்ரைன் எல்லையில் 1588 அணு ஆயுதங்கள் குவித்துள்ளதுடன் கைவசம் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 4369 ஆகும். அணு ஆயுத தாக்குதலில் ஈடுபட்டால் தரை வழி தாக்குதலுக்கு 812 ஏவுகணைகள் தயாராகவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...